பதிநான்கு நாட்களுக்குள் தேர்தல் திணைக்களம் உள்ளூராட்சி சபை தேர்தலை அறிவிக்க வேண்டும் – தினேஸ் குணவர்தன

பதிநான்கு நாட்களுக்குள் தேர்தல் திணைக்களம் உள்ளூராட்சி சபை தேர்தலை அறிவிக்க வேண்டும் – தினேஸ் குணவர்தன

எதிர்வரும் பதிநான்கு நாட்களுக்குள் தேர்தல் திணைக்களம் உள்ளூராட்சி சபை தேர்தலை அறிவிக்காவிட்டால் அது தொடர்பாக நடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹேட்டியாராச்சி சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

இன்று(30) நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன பெப்ரல் அமைப்பின் கிருலப்பனை காரியாலயத்திற்கு சென்றமைக்கான காரணம், உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக பெப்ரல் அமைப்பு அமைதியாக இருப்பதை பொறுத்து கொள்ளாது சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.