பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் பகுதியளவில் மூடப்படும்

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் பகுதியளவில் மூடப்படும்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பகுதியளவில் மூடப்படவுள்ளது.

அவசரமான விஸ்தரிப்பு திருத்தப்பணிகள் காரணமாகவே குறித்த இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி ஜனவரி மாதம் முதல் முற்பகல் 9 மணிமுதல் 6 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க விமானநிலையம் பகுதியளவில் மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தப் பணிகளுக்காக ஏற்கனவே ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.