நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மே மாதத்தில்..

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மே மாதத்தில்..

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்திருந்தனர்.

குறித்த இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை தொடர்பிலான விவாதம் எதிர்வரும் மே மாதம் ஒர் தினத்தில் நடத்தப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில்; நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குவதற்கு முன்னதாக சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும்.

இன்னும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வழக்கு விசாரணை ஒன்று தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.