UPDATE – கௌஷால் சில்வாவுக்கு மீள் விளையாட கிரிக்கெட் சபை அனுமதி

UPDATE – கௌஷால் சில்வாவுக்கு மீள் விளையாட கிரிக்கெட் சபை அனுமதி

 

இன்னும் ஒரு வாரத்திலோ அல்லது பத்து நாட்களிலோ கௌசல் சில்வாவிற்கு மீண்டும் விளையாட முடியும் என இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் மொஹான் த சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியில் இவர் இடம் பெற வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் பில் ஹியூக் தலையில் பந்து தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தலை கவசத்தை களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது கௌசல் சில்வா அணிந்திருந்தார் .

இதன் காரணமாகவே அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் மெஹான் த சில்வா தெரிவித்தார்.

 

(update) கௌஷால் சில்வா வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

பல்லேகல மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், பந்து தலையில் மோதி காயத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கௌஷால் சில்வா குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக வைத்திய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.