கொழும்பு பங்குச் சந்தை 6500 புள்ளிகளை கடந்தது

கொழும்பு பங்குச் சந்தை 6500 புள்ளிகளை கடந்தது

கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் இன்று 6500 புள்ளிகளை கடந்தது.

கொழும்பு பங்குச் சந்தை தற்போதைய நிலமையில் 58% வளர்ச்சியை காட்டுகிறது.

கடந்த நான்கு மாதங்களின் பின்னரே அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் இவ்வாறு 6500 புள்ளிகளை கடந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினத்தை விட 58 புள்ளிகள் அதிகரித்தமையினாலேயே இன்று அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 6500 புள்ளிகளை கடந்ததுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதையடுத்து பங்குச் சந்தையில் இந்த அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.