நிஷாந்த விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

நிஷாந்த விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக ஆஜராகினார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையில் நடந்துள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்,மோசடிகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.

விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக நிஷாந்த விக்ரமசிங்க மற்றும் விமானப் பணிப்பெண் நித்தியா சேனானி சமரநாயக்க ஆகியோர் இன்று பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப சூழலில் இருக்கும் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

நிஷாந்த விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரராவார்.

ஸ்ரீலங்கன் கேட்ரிங் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி விசாரணைகளுக்கு சமூகமளிக்காத காரணத்தினால், விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.