மாலபே விவகாரம் – நாடுதழுவிய அரச மருத்துவர்கள் பணிபகிஷ்கரிப்பு

மாலபே விவகாரம் – நாடுதழுவிய அரச மருத்துவர்கள் பணிபகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரிகள், இன்று(03) பகல் வேளையில் ஒரு மணி நேர பகிஷ்கரிப்பு எதிர்ப்பை மேற்கொள்ளவுள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த எதிர்ப்பை ஏற்பாடு செய்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை ரத்து செய்யுமாறு கோரி நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மாணவர்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த எதிர்ப்பு வெளியிடப்படவுள்ளது.

அத்துடன் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் தமது எதிர்ப்பு அமையும் என்று மருத்துவர் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.