கோத்தபாய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வெறும் உள்ளகத் திட்டமே – பொன்சேகா

கோத்தபாய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வெறும் உள்ளகத் திட்டமே – பொன்சேகா

2006ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ஷ மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் உள்ளக திட்டம் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று(03) மோதல் நிலை உருவாகும் முன்னர் உரையாற்றிய சரத் பொன்சேகா,அனுதாபத்தை தேடுவதற்காக கோத்தபாய மேற்கொண்ட உள்ளக திட்டத்தின் அடிப்படையில் இந்ததாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.

எந்த ஒரு பயங்கரவாதியும் 25 மீற்றர்களுக்கு அப்பால் இருந்து தற்கொலைதாக்குதலை நடத்த முடியாது என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எனினும் இந்த தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று அப்போது கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.