UPDATE – பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு

UPDATE – பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷ FCID இனால் கைது..

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து கட்டிடமொன்றை நிர்மாணித்தமை தொடர்பாக நிதி மோசடி விசாரணை பிரிவில் இடம்பெற்ற விசாரணைக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.