நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் 4 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில்

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் 4 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில்

நாடு முழுவதிலும் வைத்தியர்கள் இன்றைய தினம் நான்கு மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அடையாள தொழிற்சங்கப் போராட்டத்தின் ஓர் கட்டமாக இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் ஊடகங்களுக்கு நேற்று அறிவித்துள்ளார்.

இணைப்புச் செய்தி 

நாடளாவிய ரீதியில் நாளை பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் அரச வைத்தியர்கள்