நாமல் ராஜபக்ஷ FCID முன்னிலையில் ஆஜர்

நாமல் ராஜபக்ஷ FCID முன்னிலையில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக நாமல் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் காணப்படும் சொத்து ஒன்று தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சொத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே சிராந்தி ராஜபக்ஷ  மற்றும் யோசித ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.