கொஸ்கம இராணுவ முகாம் வெடிப்பு சூழ்ச்சியே – அதிர்ச்சியாகும் தகவல்கள்..

கொஸ்கம இராணுவ முகாம் வெடிப்பு சூழ்ச்சியே – அதிர்ச்சியாகும் தகவல்கள்..

கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக நாசமடைந்துள்ளமை வேண்டுமென்றே செய்யப்பட்ட சூழச்சியாக இருக்கலாம் என வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தல் தொடர்பிலான விசேட வெளிநாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த வெடிப்பு முறைப்படி செய்யப்பட்ட ஒன்றென கூறப்படுகின்றமை மற்றும் நேரில் பார்த்தவர்களின் கருத்தினை அடிப்படையாக கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிய ஆயுத களஞ்சிய அறையிலிருந்து பெரிய ஆயுத களஞ்சிய அறை வரையில் வெடிப்பு பரவி சென்றமை இதற்கான காரணம் என  மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான ஆயுதக் கிடங்குகள் நிலத்துக்கடியிலேயே உள்ளன. ஆயுதக்கிடங்கில் இறுதி பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள கருவி ஒன்று வெடித்தால் மாத்திரமே இவ்வாறான பாரிய வெடிப்பு ஒன்று ஏற்படும் என்பது வெளிநாட்டு நிபுணர்களின் கருத்தாகும்.

போராட்டம் ஒன்றின் போது ஆயுதக்கிடங்கு எதிரியின் கைக்கு செல்லும் நிலை ஏற்பட்டால், தப்பி செல்வதற்கு முன்னர் அது எதிரியின் கைக்கு செல்வதற்கு இடமளிக்காமல் அனைத்தையும் வெடிக்க வைக்க அவ்வாறான முறை கையாளப்படும்.

கொஸ்கம ஆயுதக்கிடங்கு இந்த முறையில் தீ பிடித்து அழிந்துள்ளது என்ற அடிப்படையில், எதிரியின் கையில் கிடைப்பதற்கு பதிலாக அழிக்கும் முறையில் செயற்படுத்தப்பட்டுள்ளதென சந்தேகம் எழுந்துள்ளதாக குறித்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதற்கமைய நீண்ட காலமாக முழுமையான பாதுகாப்புடன் இருந்து ஆயுதக்கிடங்கு நேற்று மாலை வெடித்துள்ளமை முழுமையான சூழ்ச்சிக்கமைய மேற்கொள்ளப்பட்டதென்பது வெளிநாட்டு நிபுணர்களின் ஆணித்தரமான கருத்தாக உள்ளன.

குறித்த ஆயுதக்கிடங்கின் வெடிப்பின் கனரக ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்ட இரு களஞ்சியசாலைகள் முற்றாக அழிந்துள்ளன. மேலும் சில கிடங்குகள் பாதிப்படைந்துள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.