கோத்தபாய வந்தால் தான் வெளியேறுவேன் – கோத்தபாய வந்தால் தான் வெளியேறுவேன் – மிரட்டும் சந்திரிக்கா

கோத்தபாய வந்தால் தான் வெளியேறுவேன் – கோத்தபாய வந்தால் தான் வெளியேறுவேன் – மிரட்டும் சந்திரிக்கா

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டால், அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் கோதபாயவை கட்சியில் இணைத்துக்கொள்ளுமறு கோரி வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், கோதபாய ராஜபக்ஷ இணைத்துக் கொள்ளப்பட்டால், தாம் கட்சியை விட்டும் அரசாங்கத்தை விட்டும் வெளியேற நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்று வரும் களவுகளை தடுத்து நிறுத்தவே புதிய அரசாங்கம் நிறுவப்பட்டது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.