யாழில் தொடரும் சிறுவர் பாலியலுக்கு விசேடகுழு

யாழில் தொடரும் சிறுவர் பாலியலுக்கு விசேடகுழு

யாழ். மாவட்டத்தில் தொடர்ந்து சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினூடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ் – பூங்குடி தீவு மாணவி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட மேலும் சில பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் கருத்துத் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கான ஆலோசனை அறிக்கை ஒன்றை புதிய குழுவினூடாக அடுத்த மாதம் நிறைவடைவதற்கு முன்னர் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வற்கு பிரத்தியேகமான பொலிஸ் பிரிவை நிறுவுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.