‘கோபா அமெரிக்கா ‘ – கால்பந்து போட்டி இன்று ஆரம்பம்
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சான்ட்டியாகோவில் இன்று தொடங்குகிறது.
இதில் ஆர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே, கொலம்பியா உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. இவைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் நாள் ஆட்டத்தில் “ஏ’ பிரிவில் சிலி – எக்விடார் அணிகள் மோதுகின்றன.
சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் வெற்றி பெற்ற பார்சிலோனா அணியில் இடம்பிடித்திருந்த மெஸ்ஸி ஆர்ஜென்டினா அணியின் கெப்டனாக இந்த போட்டியில் விளையாடுகிறார்.
இப்போட்டியானது ஜூலை,4-ஆம் திகதியுடன் முடிவடைகிறது.