ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் செபடம்பரில் விசாரணைக்கு..

ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் செபடம்பரில் விசாரணைக்கு..

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 412 லட்சம் ரூபா நிதியை பெற்றமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியமை குறித்து லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தொடுத்திருந்த வழக்கு நேற்று (29) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய தரப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் பிணை மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.  இதனைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம் வழக்கை இவ்வாறு வேறு ஒரு தினத்துக்கு தீர்மானித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது