நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல்

இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவை அவமதித்தமை சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

வழக்கில் பிரதிவாதியாக நாமல் ராஜபக்ச குறிப்பிடப்பட்டுள்ளார். விசாரணை ஒன்றுக்காக ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு விடுத்த அறிவிப்பை அவர் புறந்தள்ளியமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.