ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ம் திகதி

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ம் திகதி

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த மாதம் 4 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்து கொள்ள அவைத் தலைவர் லக்ஷ்மண் கிரியெல்ல இணக்கம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான விவாதம் இந்த மாதத்தின் மூன்றாவது வார நாள் ஒன்றில் இடம் பெற வேண்டுமென  அவர்கள் கோரிக்கை விடுத்ஹுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும்,அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.