இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு இதுவரை 2,000 அழைப்புக்கள்

இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு இதுவரை 2,000 அழைப்புக்கள்

இந்தியாவின் உதவியின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைக்கான அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைத்துள்ளன.

அரச வைத்தியசாலைகளில் இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில்  இந்திய அம்பியூலன்ஸ் வண்டி சேவை தற்போது வழங்கப்படுகின்றது.