கரையோர ரயில் சேவையில் ஈடுபடும் “சாகரிகா எக்ஸ்பிரஸ்” இனது நேர அட்டவணையில் மாற்றம்

கரையோர ரயில் சேவையில் ஈடுபடும் “சாகரிகா எக்ஸ்பிரஸ்” இனது நேர அட்டவணையில் மாற்றம்

கரையோர ரயில் சேவையில் ஈடுபடும் “சாகரிகா எக்ஸ்பிரஸ்”, பயண அட்டவணை நாளை 1ஆம் திகதியிலிருந்து மாற்றமடையவுள்ளது.

மாத்தறையில் காலை 4.55 மணிக்கு புறப்படும் குறித்த ரயில், காலியை காலை 5.44 மணிக்கு வந்தடையும் என ரயில் போக்குவரத்து அத்தியட்சரகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, காலியிலிருந்து கொழும்பு மருதானை நோக்கி காலை 6.00 மணிக்கு புறப்படும் ரயில், 5 நிமிடங்களுக்கு முன்னதாக காலை 5.55 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

சாகரிகா ரயிலின் பயண அட்டவணை, பயணிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.