போதைப்பொருள் குறித்து உடனடியாய் அறிவிக்க என்னை அழையுங்கள் –  பொலிஸ் மா அதிபர்

போதைப்பொருள் குறித்து உடனடியாய் அறிவிக்க என்னை அழையுங்கள் – பொலிஸ் மா அதிபர்

சகலவிதமான போதைப்பொருட்களை விநியோகிப்போர், விற்பனை செய்வோர் தொடர்பான தகவல்களை உடனடியாக தனக்கு தந்துதவுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதற்காக தனது தமது தனிப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ளார்.

போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்தி வருவதற்கு சர்வதேச வலையமைப்பு தொழில்படுமாயின் அந்த வலையமைப்பு அழிக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் நேற்று ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் தடுப்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கங்கள்:
0718592020 |  0718592022