சஜினுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை.

சஜினுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு- புதுக்கடை  நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(16) பிற்பகல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மிஹின் லங்கா நிறுவனத்துக்காக 883 மில்லியன் ரூபாவுக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்ததில், நட்டம் ஏற்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்து விசாரணை செய்யும் முகமாகவே, இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதவான் லங்கா ஜயரத்னவால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.