கலிபோர்னியாவில் வாக்குப் பதிவு மையம் அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கலிபோர்னியாவில் வாக்குப் பதிவு மையம் அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கலிபோர்னியா மாகாணத்தின் அசுசா நகரில் வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடபெற்றுள்ளது.

மர்ம நபரின் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை நேரத்தின் பிரகாரம் இன்று(09) காலை 5 மணியளவிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவமானது அமெரிக்க தேர்தலை குழப்பும் நடவடிக்கையென, வெளிநாட்டு ஊடகங்கள் மேற்கோற்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.