டீசல் விலை இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..

டீசல் விலை இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..

நாளை(01) முதல் டீசல் விலை ரூபா.02 இனால் அதிகரிக்கும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் ஐ.ஓ.சீ நிறுவனத்தின் இரண்டு வகை டீசல்களின் விலைகள் லீற்றருக்கு இரண்டு ரூபா என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒபெக் நிறுவனத்தினால் உலக சந்தைக்கு நிரம்பல் செய்யும் மசகு எண்ணெய்யின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் எரிபொருளுக்கான விலைகள் சற்றே உயர்வடையத் தொடங்கியுள்ளது.

மேலும் நாளுக்கு நாள் எரிபொருட்களுக்கான விலைகள் வீழ்ச்சியடையத் தொடங்கிய காரணத்தினால் எரிபொருளுக்கான நிரம்பலை வரையறுப்பதற்கு ஒபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.