ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு..

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், இன்று(30), முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதாக, ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டு வருவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்படி விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல, ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இது குறித்து, ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று மாலை 4 மணியளவில், இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.