ஐ.தே.கட்சி ஆதரவாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றுமோர் நபர் கைது

ஐ.தே.கட்சி ஆதரவாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றுமோர் நபர் கைது

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கஹவத்தை பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிலியந்தலை – கஹதுடுவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 5ம் திகதி கஹவத்தை நகரில் வைத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் பேரணி ஒன்றின் ஆயுத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.