இலங்கை அணியினை முதல் தோல்வியின் பின்னணியில் தஹீரினது மனைவி…!

இலங்கை அணியினை முதல் தோல்வியின் பின்னணியில் தஹீரினது மனைவி…!

தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இலங்கை அணியினரை இக்கட்டான சூழலில் தள்ளி மூன்று விக்கெட்களை கைப்பற்றி எச்சரிக்கைச் சமிஞ்சை விட்ட இம்ரான் தஹீர் போட்டிற்கு முன்னதாக அவரது மனைவியிடம் ஐந்து விக்கெட்களை கைப்பற்றுவேன் என சவால் விட்டுள்ளார்.

இது குறித்து தஹீர் கூறுகையில்;

“நான் இப்போட்டியில் மிகவும் சந்தோசமடைந்தேன். ஏனெனில் இது எனது திருமண நாளாகும். ஆதலால் போட்டிக்கு வரும் போதே மனைவியிடம் வினவினேன் ஐந்து விக்கெட்களை கைப்பற்றவா என்று..? எவ்வாறாயினும் எதிர்வரும் போட்டிகளிலும் எனது திறமை தொடரும் ….” என தஹீர் தெரிவித்துள்ளார்.