உலகளாவிய அழகு ராணி போட்டியில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயதி டி சில்வா….
உலகளாவிய ரீதியான அழகு ராணி போட்டியில் இம்முறை இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கொழும்பினை சேர்ந்த யுவதி ஒருவர் பங்கு பற்றுகிறார்.
26 வயதான ஜயதி டி சில்வா என்ற யுவதி அழகு ராணி பட்டத்தை இலக்கு வைத்து குறித்த போட்டியில் இறங்கியுள்ளார்.
உலகளாவிய உலக ராணி போட்டியில் கலந்து கொள்வதற்காக தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் அவர் தங்கியுள்ளார். இந்த போட்டியின் இறுதி போட்டி இன்று(30) இடம்பெறவுள்ளது.
12 பேர் கொண்ட குழுவில் தெரிவாகும் போட்டியில் அவர் முகங்கொடுத்துள்ளார். தனது வெற்றியை உறுதி செய்ய சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களிடம் ஆதரவு கேட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.