சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(31)…

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(31)…

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(31) அறிவிக்கப்படவுள்ளது.

குறித்த மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். குறித்த அந்த விண்ணப்பம் மருத்துவர்கள் சபையால் நிராகரிக்கப்பட்டது.

இது தொடர்பில் குறித்த மாணவி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்ளிட்ட 17 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்

இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, மாலபே தனியார் மருத்துவமனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்த வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.