ரமலான் நோன்பு இருக்கும் போது ஏன் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா?

ரமலான் நோன்பு இருக்கும் போது ஏன் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா?

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் :-

நோன்பு இருக்கும் போது, உடலில் நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறை தொடர்ந்து நடைபெறும். அதனை சீராக நடத்த பேரிச்சம் பழம் உதவியாக இருக்கும். முக்கியமாக பேரிச்சம் பழம் கொலஸ்ட்ராலை கரைத்து உடலில் இருந்து வெளியேற்றி, இதயம் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

புற்றுநோயைத் தடுக்கும் :-

பேரிச்சம் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றும். மேலும் கல்லீரலை சுத்தப்படுத்தும் மற்றும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

நோய்த்தொற்றுகளைக் கொல்லும் :-

பேரிச்சம் பழம் உடலைத் தான் ஒருசில நோய்த்தொற்றுகளில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். மேலும் ஆய்வு ஒன்றில் பேரிச்சம் பழம் 50 சதவீதம் ஆன்டிபயாடிக் பென்சிலின் போன்று செயல்படுவதாக சொல்கிறது.