மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு…

மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முதல் குறித்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை நான்கு மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.