சிறுபான்மை கட்சிகள் பிரதமரை சந்திக்கின்றது…

சிறுபான்மை கட்சிகள் பிரதமரை சந்திக்கின்றது…

தேசிய எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் இன்று(20) பிரதமரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை தேசிய காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன், மக்கள் விடுதலை முன்னணியும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.