காட்டு யானைகளின் தாக்குதலுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு…

காட்டு யானைகளின் தாக்குதலுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு…

காட்டு யானைகளின் தாக்குதல்களால் ஏற்பட்டும் தனி மனித உயிர் சேதங்களுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாவிலிருந்து 5 லட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.