பிலவுக்குடியிருப்பு காணிகள் எல்லைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பம்…

பிலவுக்குடியிருப்பு காணிகள் எல்லைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பம்…

கேப்பாபலவு, புலவுக்குடியிருப்பு காணிகள் தொடர்பான பிரச்சினை, எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருந்த நிலையில், அந்த பகுதி மக்களின் போராட்டம் இன்று 29வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று(28) பிலவுக்குடியிருப்பு பகுதிக்கு வந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் விமானப்படையினரோடு சேர்ந்து காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.