இலங்கை அணியினை துடைத்தெறிவது சுலபமென பங்களாதேஷ் அணித் தலைவர் நம்பிக்கை….

இலங்கை அணியினை துடைத்தெறிவது சுலபமென பங்களாதேஷ் அணித் தலைவர் நம்பிக்கை….

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 03 வகையான கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பங்களாதேஷ் அணித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர் குறித்து மேலும் தெரிவித்த அவர், இலங்கை அணியில் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான் போன்ற வீரர்கள் தற்போது இல்லாமை எமக்கு சாதமாக அமையும் என எதிர்ப்பார்க்கிறோம். அதேவேளை, பங்களாதேஷ் அணி வீரர்கள் முன்னணி அணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் தமது திறமையை வெளிப்படுத்தி வருகின்றமை கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.