பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு…

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு…

தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்சவை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று(20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மஹிந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது

(rizmira)