கட்டட நிர்மாணிப்புகளின் போது மின்சார சபையின் சான்றிதழினை பெறுவது கட்டாயம்..

கட்டட நிர்மாணிப்புகளின் போது மின்சார சபையின் சான்றிதழினை பெறுவது கட்டாயம்..

கட்டடங்களுக்கும் மின்சார தூண்களுக்கும் இடையில் பேணப்பட வேண்டிய குறைந்த பட்ச தூரம் தொடர்பில் புதிய கட்டுப்பாடு சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டடம் மற்றும் மின்சார தூணுக்கு இடையில் செங்குத்து மற்றும் கிடைமட்ட இடைவெளிகள் தொடர்பிலேயே மேற்குறித்த இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார தூணின் மின்னழுத்தம் ஆயிரத்திற்கு குறைவென்றால் அவ்வாறான தூண்கள் உள்ள கட்டடங்கள் வரை காணப்பட வேண்டிய குறைந்தபட்ச செங்குத்து இடைவெளி 2.4m ஆகும்.

குறைந்தபட்ச கிடைமட்ட இடைவெளி 1.5 ஆகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார தூணின் மின்னழுத்தம் அதிகமாக காணப்படும் போது கட்டடம் காணப்பட வேண்டிய தூரமும் அதிகரிக்கும்.

புதிய நடைமுறைக்கமைய உரிய பத்திரங்களின்றி கட்டடம் நிர்மாணிப்பது சட்டவிரோத செயல் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இன்னும், புதிய நடைமுறைக்கமையில் நிர்மாணிப்புகளின் போது இலங்கை மின்சார சபை அல்லது இலங்கை மின்சக்தி தனியார் நிறுவனங்களிடம் பாதுகாப்பு சான்றிதழ் ஒன்று பெற்றுக் கொள்வது அவசியமாகும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

(rizmira)