திஸ்ஸ’வுக்கு ஐ.தே. கட்சியில் இணையத் தடை இல்லை.. வரவேற்கிறார் கட்சியின் இந்நாள் பொதுச் செயலாளர்…
ஐக்கிய தேசியக் கட்சியில் மீளவும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இணைந்து கொள்வதற்கு எவ்வித தடையும் கிடையாது என ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று (20) திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகளின் போது சாட்சியாளராக கபீர் ஹஷீம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
வழக்கு விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க கட்சியில் மீளவும் இணைந்து கொள்வதற்கு எவ்வித தடையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வழக்கு விசாரணைக்களுக்கான நீதிமன்ற வளாகத்திற்கு வந்த திஸ்ஸ அத்தநாயக்கவை, கபீர் ஹஷீம் கட்டித் தழுவி சுகம் விசாரித்து நட்புடன் பேசிக் கொண்டிருந்தமை ஊடகங்களின் கவனத்தினை ஈர்த்தது எனலாம்.