குப்பைகளை இடுவதற்கு நாளை முதல் தடை விதித்தது நீதிமன்றம்..

குப்பைகளை இடுவதற்கு நாளை முதல் தடை விதித்தது நீதிமன்றம்..

கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலையின், கரதியான பகுதியில் இடுவதற்கு நீதிமன்றம் நாளை(29) முதல் தடை விதித்துள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை சேகரிக்கும் இடத்தில் ஏற்பட்ட அனர்தத்தை அடுத்து, கொழும்பு மாநகர சபையினால், கெஸ்பேவ நீதிமன்றத்தில் கடந்த 17ம் திகதி முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நாள் ஒன்றுக்கு 350 மெட்ரிக் தொன் குப்பைகளை பிலியந்தலையின், கரதியான குப்பை சேகரிக்கும் பகுதியில் இடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)