சாகல மற்றும் ருவானுக்கு முடியாததை பொன்சேகாவிடம் கொடுத்துள்ளனர்!

சாகல மற்றும் ருவானுக்கு முடியாததை பொன்சேகாவிடம் கொடுத்துள்ளனர்!

தொழில் இடங்கள், விவசாய நிலங்கள், வீதிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை சாகல ரத்நாயக்க மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோரால் எதிர்கொள்ள முடியாததால் அதற்காக பொன்சேகாவை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பாதுகாப்பு துறையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உயர் பதவியை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஜயந்த சமரவீர இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அனைத்து போராட்டங்களையும் இரும்பு மற்றும் குருதியில் அடக்கும் நோக்கில் அரசாங்கம் இப்படியான நடவடிக்கை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன் மூலம் நாட்டில் மீண்டும் நிறுத்தப்படாது இரத்தம் சிந்தப்படலாம். நாட்டை நேசிக்கும் அனைவரும் இணைந்து எதிர்ப்பை வெளியிட அணித்திரள வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.