மே தின ஊர்வலங்களுக்காக செல்லும் அரசியல் கட்சிகளுக்கு 7,000 தனியார் பஸ்கள்..

மே தின ஊர்வலங்களுக்காக செல்லும் அரசியல் கட்சிகளுக்கு 7,000 தனியார் பஸ்கள்..

மே தின ஊர்வலங்களுக்காக செல்லும் அரசியல் கட்சிகளுக்கு 7,000 தனியார் பஸ்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியே அதிகமான பஸ்களைக் கோரியுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதுதவிர அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களினால் சுமார் 5,000 பஸ்களுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே தினத்தில் சுமார் 16 கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் இதில் 15 கூட்டங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது

(rizmira)