ரத்துபஸ்வல துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில்  கைதாகிய பிரிகேடியர் மீண்டும் விளக்கமறியலில்..

ரத்துபஸ்வல துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதாகிய பிரிகேடியர் மீண்டும் விளக்கமறியலில்..

வெலிவேரிய – ரத்துபஸ்வல ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இராணுவ வீரர்களை வழிநடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட பிரிகேடியர் அநுர தேசப்பிரிய குணவர்தனவை எதிர்வரும் ஜூன் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் டி.ஏ.ருவான் பத்திரன இன்று(31) உத்தரவிட்டுள்ளார்.

இராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டதுடன், 33 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 14 வயது பாடசாலை மாணவரும் அடங்குகின்றார்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய்கள் மூன்று பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)