ஆப்கானிஸ்தானின் இந்திய தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு – சுமார் 80 பேர் பலி..

ஆப்கானிஸ்தானின் இந்திய தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு – சுமார் 80 பேர் பலி..

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே சக்தி வாய்ந்த கார் குண்டு தாக்குதலில் சுமார் 80 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளி நாடுகளின் தூதர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு உள்ளது. இதனால் இங்கு பலத்த இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று(31) காலை அங்கு தீவிரவாதிகள் கார் குண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மிகப் பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது.

இச்சம்பவம் இந்திய தூதரகம் அருகே நடந்தது. இத்தாக்குதல் நடைபெற்றுள்ள பகுதியில் தான் ஜனாதிபதி மாளிகை மற்றும் வெளிநாட்டு தூதர்களின் வீடுகளும், உள்ளன. இதனால் அங்கிருந்த வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் நொறுங்கி சேதம் அடைந்தன.

உயிர் சேத விவரம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. சக்தி வாய்ந்த கார் குண்டு தாக்குதலில் 50 பேர் பலியாகி இருக்கலாம், அல்லது காயம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குண்டு வெடித்த பகுதி முழுவதும் ரோடுகள் மூடப்பட்டன. ஏராளமான கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. சமீபகாலாக தலிபான்களுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கார் குண்டு தற்கொலை படை தாக்குதலில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)