மண்சரிவு அபாயம் குறித்து காலி கொதேகொட பகுதியிலிருந்து 200 பேர் இடம்பெயர்வு..

மண்சரிவு அபாயம் குறித்து காலி கொதேகொட பகுதியிலிருந்து 200 பேர் இடம்பெயர்வு..

காலி, கொதேகொட மேட்டுப் பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும், அப்பிரதேசத்திலிருந்த 94 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இக்குடும்பங்களைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் அருகிலுள்ள விகாரையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

(rizmira)