தொழிநுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்கவில் விமானம் தரையிறப்பு

தொழிநுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்கவில் விமானம் தரையிறப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஏ 380 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிறக்கப்பட்ட விமானத்தில் 510 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.