நாமல் உள்ளிட்ட பலர் ஸ்ரீ.சு.க போட்டியிட விண்ணப்பிப்பு

நாமல் உள்ளிட்ட பலர் ஸ்ரீ.சு.க போட்டியிட விண்ணப்பிப்பு

 

எதிர்வரும் தேர்தலுக்கான வேட்பு மனு விண்ணப்பம் பெறும் நடவடிக்கையானது நிறைவுற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்பாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

தற்போது பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் தமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வேட்பு மனு கோரி விண்ணப்பித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வல் நாமல் ராஜபக்ஷவும் வேட்பு மனு கோரி விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.