கொழும்பு- கண்டி ரயில் பயண நேர அட்டவணையில்   மாற்றம்

கொழும்பு- கண்டி ரயில் பயண நேர அட்டவணையில்   மாற்றம்

கொழும்பு கோட்டையிருந்து கண்டி வரையான நகர்சேர் ரயில்களின் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான நேர அட்டவணையில் எதிர்வரும்  ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை முதல் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது கொழும்பு கோட்டையிருந்து பிற்பகல் 5.20 க்கு பயணத்தை ஆரம்பிக்கும் இல.1033 என்ற கடுகதி ரயில் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முதல் பி.ப. 2.20 க்கு பயணத்தை ஆரம்பித்து மாலை 5.26 க்கு கண்டியை சென்றடையும்.