தனியார் ஊடகங்களில் ரணிலுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரங்கள்

தனியார் ஊடகங்களில் ரணிலுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரங்கள்

எதிர்வரும் பொது தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சார நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் ஊடகங்கள் இரண்டின் ஊடாக இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் ஒரு ஊடக நிறுவனம் பிரதமருக்கு எதிராக பாரிய எதிர்ப்பை வெளியிடுவதோடு மற்றைய ஊடகம் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதன் ஆரம்பகட்டமாக சிங்கள தனியார் ஊடக நிறுவனம் ஒன்று நேற்று இரவு பிரதமருக்கு எதிராக குற்றம் சுமத்தும் வகையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.