இளம் பெண்களை மூளைச்சலவை செய்யும் போஹோஹரம் தீவிரவாதிகள்

இளம் பெண்களை மூளைச்சலவை செய்யும் போஹோஹரம் தீவிரவாதிகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை போஹோஹரம் தீவிரவாதிகள் மூளைசலவை செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வருடம் அதிரடியாக புகுந்த போஹோஹரம் தீவிரவாதிகள் அங்கிருந்த 276 பள்ளி மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர்.

அவர்களில் 219 பேர் இன்றுவரை கிடைக்கவில்லை என்று தகவல்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடத்தப்பட்ட அவர்களை தீவிரவாதிகள் கட்டாய திருமணம் செய்துள்ளதாகவும், அவர்களை தீவிரவாதிகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது குறித்து பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர் கூறும்போது;

“போஹோஹரம் தீவிரவாதிகள் எங்களை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினார்கள்.

நாங்கள் மறுத்தபோது அருகிலிருந்த நான்கு பேரின் கழுத்தை கத்தியால் அறுத்தனர். மேலும் எங்களுக்கு இதே நிலைமைதான் என்று எச்சரித்தனர்.

இதையடுத்து நான் உட்பட பலர் அவர்களை திருமணம் செய்துகொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் போஹோஹரம் தீவிரவாதிகள் பள்ளி மாணவிகளை தீவிரவாதிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறிய அவர் சிறுமி ஒருவர் கிருஸ்தவ பிணைய கைதியின் கழுத்தை அறுத்ததை தான் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இரண்டு சிறுமிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 30 பேர் இறந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.