டெஸ்ட் போட்டிகளில் இருந்து தரங்க ஓய்வு…

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தரங்க ஓய்வு…

இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளின் தலைவர் உபுல் தரங்க டெஸ்ட் போட்டிகளில் ஆறு மாத காலத்திற்கு விளையாடாமலிருக்க கிரிக்கெட் சபையிடம் அனுமதி கோரியிருப்பதாக கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கெதிரான டெஸ்ட் தொடர்களில் தரங்க விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் “…ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் கூடுதலான கவனம் செலுத்துவதற்கே தரங்க இவ்வாறான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்..” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

(rizmira)